மெட்டா பிளாட்ஃபாம்ஸ், அமெரிக்கா முழுவதும் சிறப்பு தரவு மையங்களை கட்டுவதற்காக மிகப்பெரிய நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு, தனது செயற்கை நுண்ணறிவு (AI) கனவுகளை விரிவுபடுத்துகிறது. Financial Times வெளியிட்ட அறிக்கையின்படி, மெட்டா $29 பில்லியன் நிதியை, $3 பில்லியன் ஈக்விட்டி மற்றும் $26 பில்லியன் கடனாக தனியார் கடன் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டுவதற்காக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்த நிதி கூட்டணியில் Apollo Global Management, KKR, Brookfield, Carlyle, மற்றும் PIMCO போன்ற முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மெட்டா, Morgan Stanley நிறுவனத்துடன் இணைந்து நிதி ஏற்பாடுகளை செய்யும் பணியில் உள்ளது. மேலும், கடன் வெளியீட்டுக்குப் பிறகு அதை எளிதில் வர்த்தகம் செய்யும் வழிகளையும் ஆராய்கிறது.
இந்த நிதி திரட்டும் முயற்சி, மெட்டா CEO மார்க் சக்கர்பெர்க் ஜனவரியில் அறிவித்த $65 பில்லியன் AI உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டத்துடன் இணைந்துள்ளது. இந்த முதலீடு, OpenAI மற்றும் Google போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ள மெட்டாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
மெட்டா தற்போது லூசியானாவில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான தரவு மைய வளாகத்தை கட்டி வருகிறது. ரிச்ச்லாண்ட் பாரிஷில் அமைந்துள்ள இந்த 4 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட வளாகத்தில், முடிவில் ஒன்பது தனி மையங்கள் அமையவுள்ளது. இதற்காக 2 கிகாவாட் மின்சாரம் தேவைப்படும்; இது சுமார் 7.5 லட்சம் வீடுகளின் மின்சார பயன்பாட்டுக்கு சமம். மெட்டா, இந்த தரவு மையத்தின் மின்சார தேவையை 100% சுத்த மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் பூர்த்தி செய்ய உறுதி செய்துள்ளது.
சமீபத்தில், மெட்டா $14.8 பில்லியன் முதலீட்டை Scale AI என்ற தரவு லேபிளிங் ஸ்டார்ட்அப்பில் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் மூலம் மெட்டாவுக்கு Scale AI-யில் 49% பங்க Ownership கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Scale AI-யின் 28 வயதான CEO அலெக்ஸாண்டர் வாங், மெட்டாவின் புதிய "Superintelligence" பிரிவை தலைமைத்துவம் வகிக்க சேர்ந்துள்ளார்.
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான சிப்களை இணைத்து உயர் செயல்திறன் கொண்ட கிளஸ்டர்களை உருவாக்கும் சிறப்பு தரவு மையங்களில் அதிக முதலீடு செய்கின்றன. மைக்ரோசாஃப்ட், 2025 நிதியாண்டுக்காக $80 பில்லியன் முதலீட்டை திட்டமிட்டுள்ளது; இதில் பெரும்பகுதி AI சேவைகளுக்கான தரவு மையங்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் செலவிடப்படுகிறது.