மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களில் தனது அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தனது AI மாதிரிகளை மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க ஆப்பிள் தயாராகிறது.
Bloomberg-இன் மார்க் குர்மன் தெரிவித்திருப்பதின்படி, 2025-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) புதிய சாப்ட்வேர் டெவலப்ப்மெண்ட் கிட் (SDK) மற்றும் அதனுடன் தொடர்புடைய ஃபிரேம்வொர்க்குகளை ஆப்பிள் அறிமுகப்படுத்தும். இந்த கருவிகள் மூலம், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் — பட உருவாக்கம், உரை திருத்தம் மற்றும் பிற AI திறன்கள் — ஆகியவற்றை டெவலப்பர்கள் தங்கள் செயலிகளில் நேரடியாக இணைக்க முடியும்.
துவக்கத்தில், மேம்பட்ட கிளவுட் ஆதாரமான AI மாதிரிகளை விட, சாதனத்தில் இயங்கும் சிறிய AI மாதிரிகளுக்கே டெவலப்பர்களுக்கு அணுகல் வழங்கப்படும். இது, தனியுரிமை மற்றும் சாதனத்தில் செயலாக்கம் ஆகியவற்றில் ஆப்பிள் பாரம்பரியமாக காட்டும் கவனத்தை பிரதிபலிக்கிறது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அறிமுகமான முதல் ஆண்டில் பல சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக, AI அம்சங்கள் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டதுடன், நம்பகத்தன்மை குறைபாடுகள் இருந்தன. சில முக்கிய நிகழ்வுகளில், பிபிசி போன்ற நிறுவனங்களின் செய்தி தலைப்புகளை தவறாக சுருக்கி, தவறான தகவல்களை வழங்கியது. இதனால், உண்மையான செய்தி நிறுவனங்களிலிருந்து வந்ததாக தோன்றும் போலியான தகவல்கள் உருவானது.
தன் AI மாதிரிகளை டெவலப்பர்களுக்கு திறந்து வைப்பதன் மூலம், OpenAI, Google, Anthropic போன்ற போட்டியாளர்கள் முன்னேற்றியுள்ள AI தளங்களில் ஆப்பிள் மீண்டும் முன்னிலை பிடிக்க முயற்சிக்கிறது. இது, ஆப்பிள் ஆப் ஸ்டோர் தொடக்க காலத்தில் மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் கொண்டுவந்த புதுமைகள் மூலம் தளத்தின் வளர்ச்சி ஏற்பட்டதனை ஒத்தது.
WWDC நிகழ்வில், iOS 19, iPadOS 19, macOS 16 உள்ளிட்ட புதிய சாப்ட்வேர் அப்டேட்களின் முன்னோட்டங்களும் வெளியாகும். அதோடு, தற்போதுள்ள ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களில் மேம்பாடுகள் மற்றும் புதிய திறன்கள் — உதாரணமாக, AI ஆதாரமாக செயல்படும் பேட்டரி மேலாண்மை அமைப்பு — அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.